அந்தப் பையன் தலையை வலதும் இடதுமாக தீவிரமாக ஆட்டி தனது தாயுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். பார்ப்பதற்கு சுவாரஸியமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. அவனது மூடிய வலது கையில் இருந்த ரூபா நோட்டை தாய் பறித்து விடுவாளோ என்ற பயத்தில் விரல்களுக்கு இடையில் இறுக்கப் பற்றிப் பிடித்திருந்தான். சாதாரணமாக நின்றுகொண்டிருந்தாள் தாய். ஆனாலும் பையனின் கையிலிருந்த காசைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மென்மையான அணுகுமுறைதான் தெரிந்தது. ஆனால், அவன் அந்தக் காசை தன்னிடம் தந்துவிடவேண்டும் என்ற ஆவல் தெரிந்தது.
‘Short storys’ பகுப்புக்கான தொகுப்பு
ரயிலோரக் கதை – 1
Posted in Short storys on செப்டம்பர் 6, 2007 | 1 மறுமொழி »



